நாட்டின் அரசியல் முறையில் புதிய மறுசீரமைப்புக்களை ஏற்படுத்துமாறு கோரி ஈராக்கின் தலைநகரான பக்தாத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். பக்தாத், பஸ்ரா மற்றும் நஸ்ரியா ஆகிய நகரங்களில் இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. மக்களுக்கு தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கு காணப்படுகின்ற உரிமைகளை இல்லாதொழிக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.