2030ம் ஆண்டளவில் மொத்த மின்சார கேள்வியில் 70 சதவீதத்தை புதுப்பிக்கதக்க எரிசக்தி மூலம் பெற்று கொள்ளும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க போவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கதக்க எரிசக்தி வளர்ச்சி எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற செயற்பட்டரையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் வளர்ச்சி தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது. இலங்கையின் நிலையான எரிசக்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஸ்ஸங்க எஸ்.ரொட்ரிகோ உள்ளிட்ட இந்திய எக்ஸ்போ நிறுவன அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/-NyFXZlc_Ro”]