இங்கிலாந்து – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டுவண்டி – 20 தொடரின், இரண்டாவது போட்டி நாளை டேர்பனில் நடைபெறவுள்ளது. நேற்று இடம்பெற்ற முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றிப்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்றது. டெம்பா பவுமா 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் க்ரிஸ் ஜோர்தன் இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினார். அதற்கமைய 178 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது
. அணி சார்பில் ஜேசன் ரோய் 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் லுங்கி நிகிடி 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். 11 மாத இடைவெளிக்கு பின்னர் அணிக்கு திரும்பிய டெல் ஸ்டெயின் ஒரு விக்கட்டை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாக லுங்கி நிகிடி தெரிவானார்.