முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதினின் கணக்கிற்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.
இதுதொடர்பான முறைப்பாடு ஒன்றை தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் பொலிஸ் தலைமை காரியாலயத்தில் இன்று கையளித்தார். குறித்த முறைப்பாட்டை கையளித்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
“முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதினின் கணக்கிற்கு கடந்த 52 நாள் ஆட்சியின் போது ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் எழுத்து மூலம் முறையிட பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தேன். இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நான் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரினேன். றிஷாட் பதியூதின் என்பவர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புபட்டு அதற்கு அரசியல் பாதுகாப்பு வழங்கியவர் என்பது அனைவரும் அறிந்தது. ஏன் இந்த பணப்பறிமாற்றம் இடம்பெற்றது. அதனை போன்று 2 வது சுற்றில் ஒரு இலட்சத்தை வைப்பிலிடும் போது எப்பிஐ அமைப்பு ஏன் நிறுத்தியது என்பது குறித்தும் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை மேற்கொள்ளுமென நினைக்கின்றேன். அதனை போன்று தகவல்களை வெளியிட்டதன் பின்னர் அண்மையில் அவர் ஊடகங்களிடம் தனக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாதென்றும் அவருக்கு இவ்வாறானதொரு கணக்கொன்று இல்லையென்றும் தெரிவித்துள்ளார். எங்களுக்கு தெரிந்த வகையில் இப்ராஹினின் மகனின் கைத்தொழிற்சாலைக்கு செம்பு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பிலும் றிஷாட் பதியூதினுக்கு தெரியாது. றிஷாட் பதியூதினின் கட்சியின் ஆலோசகர்கள் குண்டு வைத்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை குறித்தும் றிஷாட் பதியூதினுக்கு தெரியாது. சதொச நிறுவனத்தினால் வாகனங்களை கொண்டு சென்று சஹ்ரான்களை அழைத்துச் சென்றமை தொடர்பிலும் றிஷாட் பதியூதின் தெரிந்திருக்கவில்லை. இது தொடர்பாக எதுவும் அறியாத றிஷாட் பதியூதின் இந்த அமெரிக்க கணக்கு குறித்தும் ஒன்றும் தெரியாதிருப்பது குறித்து நாம் புதுமையடைய மாட்டோம். றிஷாட் பதியூதினுக்கு ஒன்றும் தெரியாதென அவர் தப்பிக்க முடியாது. இதுகுறித்துமுறையான விசாரணைகள் மேற்கொண்டு தகவல்களை வெளிப்படுத்தும் போது றிஷாட்பதியூதினின் வாயை மூடும் அளவிற்கு பதில் கிடைக்குமென நான் நினைக்கின்றேன்.”
[ot-video type=”youtube” url=”https://youtu.be/Pk1DxPgVOVw”]