கல்கிஸ்ஸை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே அவர் கைதாகியுள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ கிராமுக்கும் அதிக எடைகொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 10 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைதானவர் படோவிட்ட, கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான நபரென தெரியவந்துள்ளது. அவரை இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.