சீனாவின் வூஹான் நகரிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அக்குறேகொட பாதுகாப்பு படை முகாமில் மாலை 4 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த 33 மாணவர்களுக்கும் சிகிச்சை வழங்கிய வைத்தியர்களும் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.