இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடலில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 2.34 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்நிலையில் நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கரையோரப்பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கம் குறித்து தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு துறைசார் நிறுவனங்களின் ஆலோசனைகளுக்கு அமைய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் குறிப்பிட்டுள்ளது.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=unDAw19QWlg&feature=youtu.be&fbclid=IwAR063Fo5dTSUAD1ESdub0stHqUWBCpg2GdfEs-akUBUSsaDSr3mRLxCeCCs”]