சட்டவிரோதமாக பணியிலிருந்து வெளியேறிய இராணுவத்தினர் மற்றும் முப்படையினர் 4 ஆயிரத்து 921 பேர் பொதுமன்னிப்பு காலத்தில் மீண்டும் சேவையில் இணைந்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடந்த 5ம் திகதி அமுல்ப்படுத்தப்பட்ட பொதுமன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பு காலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய முப்படை அதிகாரிகள், இராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் மீண்டும் சேவையில் இணைந்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.