ஐக்கிய தேசிய கட்சியின் உக்கிரமடைந்து வரும் நெருக்கடிகளை தீர்த்துக் கொள்ள முடியாத நிலையில் காணப்படுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும் இந்நெருக்கடி மேலும் உக்கிரமடைந்ததாக பாதுக்க கலட்டுவாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்தார்.
“நாட்டின் சுதந்திரம், தேசிய இறைமை போன்றவற்றை வெளிநாடுகளுக்கு தாரைவார்த்த அரசாங்கம் தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் வழங்கிய ஆணையின் கூக்குரல் சிறிகொத்த தலைமையகத்தில் ஒலிக்கின்றது. நீங்கள் அறைந்த அடி தற்போது சிறிகொத்தவை உலுக்கியுள்ளது. சிறிகொத்த கூடிய வேளைகளில் அங்கு உற்பூசல்களே இடம்பெறுகின்றன. ஒரு சிலர் தலைமைத்துவத்திற்காக ஆதரவாக செயல்படுகின்றனர். மற்றுமொரு குழுவினர் எழுந்து சென்று எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். தலைவர் வெளிப்பக்கத்தால் வெளியேறி வீடு செல்கிறார். இவ்வாறானதொரு நிலைமை கிட்டும் என ஐக்கிய தேசிய கட்சி கனவில் கூட நினைத்திருக்காது. நீங்களே இதனை செய்தீர்கள். இதுவே நாட்டு மக்களாகிய நீங்கள் வழங்கிய செய்தியாகும். மக்கள்வழங்கிய ஆணையை பலப்படுத்துவதற்காக நாங்கள் ஒன்று கூடியுள்ளோம்.”
[ot-video type=”youtube” url=”https://youtu.be/1aWNr7Zi67U”]