கொரோனா வைரஸ் உலகம் பூராகவும் பரவியதை தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 1018 ஆக அதிகரித்துள்ளது. 43 ஆயிரம் பேர் இவ்வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர். நேற்றைய தினம் புதிய கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 2477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரஸ் தாக்கத்திற்குள்ளான 4 ஆயிரம் பேர் முழுமையாக குணமடைந்து சீனாவில் உள்ள வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகளும் பரீட்சித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளன. உலகம் பூராகவும் இவ்வைரஸ் துரிதமாக பரவி வருவதனால் விஞ்ஞானிகள் இதற்கு எதிராக புதிய வைரஸூடன் கூடிய தடுப்பூசியை தயாரிப்பதற்காக ஆய்வுகளை நடாத்தி வருகின்றனர்.
சீனாவில் இவ்வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகிய நபர்களுடன் நெருங்கி செயல்பட்டவர்களயின் அவர்களை இனங்கண்டு எச்சரிக்கை விடுப்பதற்கான புதிய செல்லிட தொலைபேசி தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களது பெயர் செல்லிட தொலைபேசி இலக்கம் மற்றும் அடையாள அட்டை இலக்கம் போன்றனவற்றை அதில் உள்ளடக்கப்படும் பட்சத்தில் இவ்வைரஸ் தாக்கதினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் தாம் நெருங்கிய தொடர்பை வைத்திருந்ததா இல்லையாஎன்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
உஹானில் உள்ள ஹூசேன் ஷான் வைத்தியசாலையில் புதிய கொரோ வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்காக உடன் சிகிச்சைகளை வழங்குவதற்கான முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5 ஜி தொழில்நுட்பத்தின் ஊடாக நோயை கண்டறியும் தொகுதியை பயன்படுத்தி, இதன் தாக்கங்கள் குறித்து கண்டறிந்து கொள்ள முடிகின்றது. விசேட வைத்திய குழுவொன்று இதற்கென ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சுவாசம், இருதய நோய், தொற்று நோய் போன்றனவற்றை உள்ளடக்கியவாறு நோயாளிகளுக்கு சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.