இந்நாட்டின் விமான நிலைய ஊழியர் படையினருக்கும் விமான சேவைகள் ஊழியர் படையினருக்கும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை கண்டறிவதற்காக சுகாதார அமைச்சு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் கம்பனியில் விசேட வேலைத்திட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.