மொட்டு சின்னத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியெனும் பெயரில் அரசியல் கட்சியொன்று உருவாகி குறுகிய காலத்தில் 2018ம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் அமோக வெற்றியீட்டி இன்றுடன் ஈராண்டுகள் பூர்த்தியாகின்றன. 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஒருங்கிணைந்த அதன் அரசியல் கட்சியாக மேலும் பல கட்சிகளுடன் கைக்கோர்த்து, அரசியல் களத்தில் தடம் பதித்தது.
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அதன் தவிசாளராக நியமிக்கப்பட்டார். அதன் தேசிய அமைப்பாளராக இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன் வெற்றிக்காக பெரும் பங்களிப்பாற்றினார். புதிய கட்சியாக அரசியல் களத்தில் பிரவேசித்து வரலாற்று வெற்றிகளை ஈட்டுவதற்கு பசில் ராஜபக்ஷவின் முறையான வழிக்காட்டல்கள் துணைநின்றன.
2018ம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கு முகங்கொடுத்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அத்தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. 340 உள்ளுராட்சி மன்றங்களுக்காக நடத்தப்பட்ட தேர்தலில் 231 தொகுதிகளை பெற்று பொதுஜன முன்னணி அமோக வெற்றியீட்டியது. அத்தேர்தலில் எதிர்தரப்பான ஐக்கிய தேசிய முன்னணிக்கு 34 சபைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இத்தேர்தலில் உள்ளுராட்சிமன்றங்களுக்கு பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 3436 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பசில் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் பொதுஜன முன்னணி கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்தியது. ஜனாதிபதி தேர்தலில் 52.25 சதவீத வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டினார்.
அவர் 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளை பெற்று கொண்டார். இன்று வரை இலங்கை அரசியல் கட்சி வரலாற்றில் பாரிய அளவில் முன்னேற்றம் கண்டு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எல்லையில்லா அர்ப்பணிப்புக்களுடன் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்ததன் பயனாக இவ்வெற்றியை ஈட்ட முடிந்தது. தேசிய சமய தனித்துவத்தை பாதுகாத்து பொருளாதார சீர்த்திருத்ததுடன் கூடிய அனைத்து மக்களும் ஒன்றாக வாழக்கூடிய தாயகம் தொடர்பான எதிர்ப்பார்ப்பை யதார்த்தமாக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது பணியை முன்னெடுத்து வருகின்றது.