புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைவதற்கு முன்னர் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் வருடங்கள் நாட்டின் அபிவிருத்திக்கான முக்கியமான வருடங்களாக அமையுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. புலனாய்வு பிரிவை வலுப்படுத்தல் , மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், வேலையற்ற பட்டதாரிகளுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை வழங்குதல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைவதற்கு முன்னர் அனைத்து வேலைத்திட்டங்களும் பலப்படுத்தப்படுமெனவும் ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.