அம்பலங்கொட ஊருவத்த பகுதியில் ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 06.40 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சாகரிகா ரயிலில் குறித்த நபர் மோதுண்டு, ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். சடலம் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அம்பலங்கொட பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை வெல்லவாய யாலபோவ பகுதியில் பஸ்சொன்றில் மோதுண்ட பாடசாலை மாணவரொருவர், பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளான பதுளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாலபோவ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 9ம் தரத்தில் பயிலும் மாணவரொருவரே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாடசாலை பஸ்சிலிருந்து இறங்கி பாதையை கடக்க முற்பட்டபோது, மற்றுமொரு பஸ்சில் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெல்லவாய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மாணவர் மேலதிக சிகிச்சைகளுக்கென பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.