கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் மாலை 4 மணிக்கு சிறி கொத்தவில் கூட்டம் நடைபெறும். பொதுத்தேர்தலில் அமைக்கப்படவுள்ள கூட்டணி மற்றும் சின்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. மேலும் புதிய கூட்டணியின் பொதுச்செயலாளர் தொடர்பிலும் இறுதி முடிவுகள் எடுக்கப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணியின் பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை, சஜித் பிரேமதாச நியமித்துள்ள நிலையில், அதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் கூட்டணியின் செயலாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்கவை நியமிக்க வேண்டுமென ரணில் ஆதரவு தரப்பினர் அழுத்தங்களை வழங்கி வருகின்றனர். அதற்கமைய இன்றைய செயற்குழுக் கூட்டத்தில், கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கைகளும் முன்வைக்கப்படவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.