வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான வயதெல்லை 45 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வயதெல்லை 35 ஆக வரையறுக்கப்பட்டிருந்தது. எனினும் வயது கூடிய பட்டதாரிகள் மற்றும் ஒரு சில சமூக அமைப்புக்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வயதெல்லையை நீடிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமனான தகுதியுடைய டிப்ளோமா பாடநெறிகளை பூர்த்தி செய்திருக்கவேண்டியது அவசியமாகும். கடந்த ஜனவரி முதலாம் திகதி வரை பட்டம் பெற்று ஒரு வருடத்திற்கும் அதிக கலாம் வேலையற்று காணப்படும் பட்டதாரிகள் நியமனத்திற்கென விண்ணப்பிக்க முடியும். அவர்கள் குறித்த காலப்பகுதியில் வேலை அற்றவர்களாக காணப்பட்டதை கிராம அதிகாரி அல்லது பிரதேச செயலாளர் உறுதிப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.