கொரோனா வைரஸினால் 34 ஆயிரத்து 600கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கூடுதலானோர் சீன பிரஜைகள் ஆவர். கொரோனா வைரஸ் ஹூபை மாநிலத்திலேயே கூடுதலான பரவியுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள பாடசாலைகள் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை மூடப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து வருகை தரும் அனைத்து பிரஜைகளும் 14 நாட்களுக்கு பரிசோதனைக்குட்படுத்தி பராமரிக்க ஹொங்கொங் தீர்மானித்துள்ளது. ஹொங்கொங்கில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. வைரஸ் தொடர்பாக பரவும் வதந்திகள் காரணமாக அதனை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
மலேஷியாவும் சீனாவில் இருந்து வருகை தருவோருக்கு தமது நாட்டில் பிரவேசிக்க தடை விதித்துள்ளதுடன், சட்டத்தை மேலும் கடுமையாக்கியுள்ளது. ஹூபை மாநிலத்தில் பொது கூட்டங்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 10 நகரங்களை சேர்ந்த 20 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் 25 நாடுகளுக்கு பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன. வூஹான் மாநிலத்திற்கு சென்று இந்த நாடுகளுக்கு திரும்பியவர்களினால் இந்த வைரஸ் பரவியுள்ளது. ஜப்பான் கடல் எல்லையில் பயணித்த கப்பலில் இருந்த 3700 பேருள் 60 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
சீனாவுக்கு வெளியே இருவர் மாத்திரமே இதுவரை உயிரிழந்துள்ளனர். பிலிபைன்ஸிலும் ஹொங்கொங்கிலும் ஒருவர் வீதம் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் இருவரும் வூஹானில் இருந்து வருகை தந்தவர்கள். கொரோனா வைரஸினால் சுவாச தொகுதி மோசமாக பாதிக்கப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சாஸ், மேர்ஸ் நோய்களிலும் பார்க்க பாரிய பாதிப்புக்கள் சுவாச தொகுதிக்கு இதன் ஊடாக ஏற்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்றியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சாஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுள் 1600கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொடர்பாக கண்காணிக்கப்படுவதாக தொற்று நோய் மருத்துவ நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.