ஷிஆரா சூறாவளி தாக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்துகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்பில் இங்கிலாந்தில் விசேட அனர்த்த எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
மணிக்கு சுமார் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசுமென அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனுடன் பலத்த மழையும் இதனால் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்மாறு இங்கிலாந்து அதிகாரிகள் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.