நாட்டின் சில பகுதிகளில் திடீர் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பேராதனை மஹகந்த பிரதேசத்திலும் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸார், கண்டி தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அழகல்ல மலைப்பகுதியிலும் தீப்பரவல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.