ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தனியான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் ஆணைக்குழு அமைக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தினால் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி மற்றும் துஸ்பிரயோகத்துடன் தொடர்புடைய சகலரும் எவ்வித தராதரமும் பாராது சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.