பொலிஸ் அதிகாரிகள் 14 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சேவையின் தேவை கருதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், இரு பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் 06 பேர உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் இருவரும் அதில் உள்ளடங்குகின்றனர். சிரேஷ்ட் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எஸ்.வீரசேகர மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலிருந்து பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஏ. பண்டாரநாயக்க கொழும்பு தெற்கு பிரிவிலிருந்து மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். மனோஜ் கொழும்பு மத்திய பிரிவிலிருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.