பல்வேறு காரணங்களுக்காக சட்டவிரோதமாக முப்படையிலிருந்து தப்பிச்சென்றவர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் இன்று முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் அமுலில் இருக்கும். குறித்த காலப்பகுதியில் முப்படையிலிருந்து விலகிச்சென்றவர்கள் மீண்டும் சேவையில் இணைவதற்கு அல்லது சட்டரீதியாக சேவையிலிருந்து விலகிச்செல்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் இவ்வாறு சேவையிலிருந்து விலகிச்சென்றவர்களுக்கே குறித்த பொதுமன்னிப்பு காலம் ஏற்புடையதென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று அனுஷ்டிக்கப்பட்ட இலங்கையின் 72வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் குறித்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.