பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்வழி கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார். பிரதமராக பதவியேற்ற பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்வழி கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன் அடிப்படையில் இன்று பி.ப ஒரு மணி முதல் 1.30 வரையிலான காலப்பகுதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதேநேரம் மோட்டார் வாகன சட்டத்தின் கீழான உத்தரவு தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. ததேகூ முன்வைக்கவுள்ள ஒத்திவைப்பு விவாதமும் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.