சீனாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக அந்நாட்டில் இருந்து கிடைக்கும் புதிய செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டோரில் ஒருமாத குழந்தையும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் மாத்திரம் இவ்வைரஸினால் 3235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 18 வீத அதிகரிப்பாகும். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. சீனாவில் இதுவரை 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். இதேநேரம் 3700 பேரை கொண்ட ஜப்பான் கப்பலில் இருந்த 10 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வூஹான் மாநிலத்தில் உள்ள 2வது அமெரிக்கா குடியுரிமையை பெற்றுள்ளோரை அங்கிருந்து வெளியேற்ற ஆரம்பித்துள்ளது. வூஹானில் உள்ள 138 தாய்லாந்து நாட்டவரை வெளியேற்றவும் அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுவரை கொரோனா வைரஸினால் 28 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இருப்பினும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய் அல்லவென உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.