உலகின் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் பதிவாகியுள்ள புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2040 ஆம் ஆண்டளவில் 81 சதவீதமாக உயரலாமென உலக சுகாதார தாபனம் அறிவித்துள்ளது. புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உரிய மருத்துவ சிகிச்சைகள், போதிய முதலீடுகளை மேற்கொள்ளாமையே இதற்கான காரணம் என உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.
அபிவிருத்தியடைந்த மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகள் சுகாதார துறைக்காக செலவிடும் சமமற்ற முதலீடுகள் இதற்கு நேரடியாக தாக்கம் செலுத்துகின்றன. புற்று நோயாளர்களின் எண்ணிக்கைக்கு இணைவாக மரணங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கலாமென அறிவிக்கப்படு’கின்றது. 25 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டினை செலவிடுவதன் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள 7 மில்லியன் புற்று நோயாளர்களின் உயிர்களை பாதுகாக்க முடியுமென உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.
முழு உலகிலும் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 60 வீதத்தினால் அதிகரிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள போதிலும் அதில் 25 வீதமானவை புகையிலை மற்றும் மதுபானத்தினால் ஏற்பட்டுள்ளதாக அந்த தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.