இராணுவ அதிகாரிகள் 244 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 17 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். லெப்டினன் கமாண்டர்கள் 45 பேருக்கு கேர்ணல் பதவி வழங்கப்பட்டுள்ளது. 49 மேஜர்களுக்கு லெப்டினன் கேர்ணல் பதவி வழங்கப்பட்டுள்ளது. 41 கெப்டன்கள் மேஜர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.