அரைசொகுசு பஸ்வண்டிகளின் சேவை தொடர்பில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை இவ்வாரம் அமைச்சர் மஹிந்த அமவீரவிடம் கைளிக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது 400 அரைசொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனினும் அதில் எவ்வித வசதிகளும் இல்லையென பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதுதொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய தரப்பினருடன் கலந்துரையாடி பரிந்துரைகளை முன்வைக்குமாறு துறைசார் அமைச்சர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். அதற்கமையவே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.