தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அரசியல் அமைப்பின் 34 வது பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமையவும், நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் பரிந்துரையின் பெயரிலும் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருட்டு, நம்பிக்கை மோசடி மற்றும் மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட சிறுகுற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்தவர்களுக்கே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாரிய 30 குற்றச்செயல்களுடன் தொடர்புடைய எந்தவொரு சிறைக்கைதியும் குறித்த பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட சிறைக்கைதிகள் இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.