எல்.ரி.ரி அமைப்பின் இலட்சினையுடன் கூடிய துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் போலி இறப்பர் முத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி விவேகானந்தா பகுதியில் வைத்து சந்தேக நபர் கைதாகியுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் கிளிநொச்சி பொலிசார் இணைந்து சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது எல்.ரி.ரி அமைப்பின் இலட்சினையைக் கொண்ட 29 துண்டுப்பிரசுரங்கள் மற்றும் 5 போலி இரப்பர் முத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் போலி இரப்பர் முத்திரையொன்றும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.