கொழும்பின் அபிவிருத்திக்கு ஐக்கிய தேசியக்கட்சி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஸ்த்தம்பிதம் அடையும் வகையில் கடந்த அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.