ஜாஎல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு முச்சக்கர வண்டி சாரதியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியில் பயணத்தில் இருவரே தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டி சாரதியிடமிருந்து ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான சாரதி ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 67 வயதான அவர் மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.