சீனாவின் வூஹான் நகரில் புதிய வைத்தியசாலையொன்று திறக்கப்படவுள்ளது. நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைய வைத்தியசாலை ஓரிரு நாட்களில் திறக்கப்படுமென சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக வசதிகைள கொண்டதாக வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 8 நாட்களில் அதன் நிர்மாணப் பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.