ஊடகவியலாளர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா கல்வியை தொடர்வதற்கு நிதி வழங்குவதற்கு அரசாங்கம் தயாரென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும் பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியபோதே இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கென புதிய கடன் திட்டமொன்று எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் அறிமுகப்படுத்தப்படும். இம்மாதம் 7ம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஊடகத்துறை சார்ந்த பட்டப்படிப்புக்கு இரண்டு இலட்சம் ரூபா வரையும், டிப்ளோமாவுக்கு ஒரு இலட்சம் ரூபா வரையும் கடனாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.