இவ்வருடத்திற்குள் சகல குடிசை வீடுகளும், அங்கசம்பூர்ண வீடுகளாக மாற்றப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 60 நாட்களில் 14 ஆயிரத்து 22 வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆதரவற்ற மக்களை கடனாளிகளாக்கும் யுகம் நிறைவுக்கு கொண்டுவரப்படுமெனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கிராமத்திற்கு வீடு, நாட்டுக்கு நாளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குருநாகல் கிரிபாவ வராவௌயில்; தேசிய நிகழ்வு இடம்பெற்றது. திட்டத்தினூடாக குறைந்த வருமானம் பெறும் 14 ஆயிரத்து 22 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவின் சௌபாக்கியமான நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய சகல குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியிலுள்ள 14 ஆயிரத்து 22 கிராம சேவை பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தலா ஒரு வீட்டுக்கு 60 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. திட்டத்திற்கென 8 ஆயிரத்து 413 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதிகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.