விசேட தேவையுடைய இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கென புதிய இரு மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக பிரிவிலும், மட்டக்களப்பிலும் குறித்த புதிய இரு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது இவ்வாறான 7 மத்திய நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள இரு மத்திய நிலையங்களுடாக ஒன்றில் 50 பேர் என்ற வீதத்தில் 100 பேருக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கென 144 மில்லியன் ரூபா செலவிட எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.