திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்படும் கொஸ்கொட சுஜியின் உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அகுங்கல்ல பிரதேசத்தில் வைத்து அவரை கைதுசெய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
அவரிடமிருந்து ஒரு கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரின் கொஸ்கொடையிலுள்ள வீட்டிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரைபிலொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.