நிலையான வைப்பு மற்றும் நிலையான வெளியீட்டு வசதிகள் என்பனவற்றின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் நிதிச்சபை நேற்று கூடிய போது இத்தீர்மானம் எட்டப்பட்டது.
இதற்கமைய நிலையான வைப்பு விகிதம் 6.50 விகிதத்தினாலும் நிலையான வெளியீட்டு வசதிகள் 7.50 தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் பூகோல பொருளாதாரத்தில் தற்போது நிலவுகின்ற மற்றும் எதிர்பார்த்துள்ள இழப்பை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சந்தையில் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவும் பணவீக்கத்தை குறைக்கவும் இது காரணமாக அமையும்.