கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட சீன பெண் மத்திய மாகாணத்தில் நடமாடிய இடங்களில் பரிசோதனை நடத்தப்படுவதாக மத்திய மாகாகண சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் அர்யுண திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த பெண் தங்கியிருந்தாக கூறப்படும் ஹோட்டல் ஊழியர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய மாகாணத்தில் இந்த நோய் தொடர்பில் சந்தேகிக்கப்படுவோருக்காக கண்டி வைத்தியசாலையில் வார்ட் ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் திலகரத்ன மேலும் தெரிவித்தார்.