சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் பிரவேசித்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
வட கடற்பரப்பின் நெடுந்தீவுக்கு அருகாமையில் ஆழ்கடல் மீன் பிடி வள்ளத்துடன் இம்மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இதற்கு பயன்படுத்தப்பட உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் உபகரணங்களும் மேலதிக விசாரணைக்கென கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.