இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்திற்குற்பட்ட ஒரேயொரு நோயாளியே இனங்காணப்படடுள்ளதாக, சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது. அது சீன பெண்மணி மாத்திரமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிழையான தகவல்களுக்கு ஏமாற வேண்டாமெனவும், இந்நோயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி, சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக ஒரு சிலர் மக்களை அச்சத்திற்குட்படுத்துவதற்காக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான போலி பிரசாசரங்களுக்கு ஏமாற வேண்டாமென, அரசாங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் பல்வேறு ஊடகங்களுடாக வெளிவரும் போலி தகவல்கள் மற்றும் மக்களை பிழையான வழியில் இட்டுச்செல்வதற்கான பிரசாரங்கள் குறித்தும் மக்கள் ஏமாறக்கூடாது என, ஊடகத்துறை அமைச்சும் பொது மக்களை கேட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகிய சீன பெண்மணி தொடர்ந்தும் அங்கொடை, தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லையென அறிவிக்கப்படுகிறது. அவர் தங்கியிருந்த இடங்கள் மற்றும் விஜயம் செய்த இடங்கள், சந்தித்த நபர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த, சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.