நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்தது. எதிர்வரும் மே மாதம் 18 , 19 20 ஆம் திகதிகளில் வழக்கு விசாரிக்கப்படும்.
வட மாகாண முன்னாள் அமைச்சரான பி.டெனீஸ்வரனை அப்பதவியிலிருந்து நீக்க முன்னாள் முதலமைச்சர் எடுத்த முடிவை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது, அதனை முதலமைச்சர் செயல்படுத்தவில்லையென தெரிவித்து மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்துள்ளார்.