வஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது
Related Articles
இந்தியாவின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசபந்து கலாநிதி வஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் இந்திய அரசினால் பத்மபூஷண விருது வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது உயர் குடியியல் விருதாகும். இந்திய பிரதமரால் ஒவ்வொரு வருடமும் நியமிக்கப்படும் பத்ம விருதுகள் சபையினால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கலாநிதி வஜிர சித்ரசேன இலங்கை நடனத்துறையில் ஒரு வாழும் வரலாறாக போற்றப்படுவதுடன் பாலே நடனத்தில் புகழ்பெற்ற இலங்கையின் முதலாவது நடனக் கலைஞரும் கண்டிய நடனத்தை தனது முழுநேர தொழிலாக கொண்டிருக்கும் முதலாவது இலங்கை பெண் அவரது கலைப்பயணம் ஆறு தசாப்தங்களுக்கு மேலாகும்.
87 வயதிலும் சித்ரசேன – வஜிரா நடன நிறுவனத்தின் தலைவராகவும் நடனப் பாடாசாலையின் அதிபராகவும் அவர் கடமையாற்றுகிறார்.
அதேபோன்று பத்மஸ்ரீ விருதினைப் பெறும் மற்றொருவரான மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்க களனி பல்கலைக் கழகத்தில் ஹிந்தி பேராசிரியராக கடமை புரிந்துள்ளார்.
1943இல் இந்தியாவில் பிறந்த அவர் லக்னோ பல்கலைக்கழகத்தில பயின்றுள்ளார். இலங்கை கல்வி நிறுவனங்கள் மத்தியில் ஹிந்தியை அறிமுகம் செய்து மேம்படுத்திய பேராசிரியர் தசநாயக்க, 1975 ஆம் ஆண்டில் நாக்பூரில் நடைபெற்ற முதலாவது உலக ஹிந்தி மாநாட்டில் பங்குகொள்வதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.