கொரோனா வைரஸ் தாக்கம் காணப்படுவதாக சந்தேகத்தின்பேரில் ஐனுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மூவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் இரத்த மாதிரி மற்றும் சளி மாதிரி என்பன பொரல்லை வைத்திய பரிசோதனை நிறுவனத்தினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. முதற்கட்ட மாதிரி அறிக்கைக்கமைய அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லையென வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா வைரஸ் இந்நாட்டுக்கு வருவதை தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார். விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்ட சகல இடங்களிலும் இதற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.