கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டதால், மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நானுஓயா மற்றும் அம்பேவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம்புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டரை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டரை பேச்சாளர் தெரிவித்தார்.