சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. 830 பேர் இந்நோய் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் 177 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளுக்கு இந்நோய் பரவுவதை தடுத்ததன் காரணமாக சீனாவின் ஹூபை மாநிலத்தின் வூஹான் நகரிற்கு நுழைவதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு சில நிகழ்வுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வூஹான் நகரில் சினிமா திரையரங்குகள் மூடிவிடப்பட்டுள்ளதுடன் காட்சிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நகரிலுள்ள அனைவருக்கும் முகமூடிகளை அணிந்து பயணிக்குமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை புதிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிங்கப்பூரிலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.