மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிப்பாளயம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 08 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் எதிர் திசையில் வருகை தந்த துவிச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பயணித்தமையே விபத்துக்கு காரணமென தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளார்.