பால்மா இறக்குமதியை மட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார். வாய்மூல பதிலுக்காக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்கள் மத்தியில் திரவப் பால் பாவனையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். அது தொடர்பில் ஏனைய தரப்பினரும் துரித பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். சுகாதாரமான வாழ்க்கை நிலையை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு திரவ பால் பாவனையை அதிகரிப்பது அத்தியவசியமெனவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி மேலும் தெரிவித்தார்.