யாழ். பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைகழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு தண்ணீரில் போடப்பட்டுள்ளார். கொலையாளியை உடனடியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடிய கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.