குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ச்சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் பாவனையாளர்களை இலக்காக கொண்டு நிவாரண திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. உர மானியம், காப்பீடு போன்றவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுதாக அமைச்சர் ச்சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
விவசாய அமைச்சை, கமநல மாளிகைக்கு கொண்டுசெல்வற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக 96 இலட்சம் ரூபா நிதியை மீதப்படுத்த முடியுமென அமைச்சர் ச்சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.