இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உரிமங்களைப் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவுசெய்வதில் காணப்படும் மோசடிகளை இல்லாது செய்வதற்காக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் விதானகே குறிப்பிட்டுள்ளார்.
போலிக் காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிப்பு தொடர்பில் வருடமொன்றுக்கு சுமார் மூவாயிரம் முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்தே காணி பதிவுசெய்வதற்கான புதிய மென்பொருளை அடுத்த மாதம் தொடக்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், காணிப் பதிவுகள் விரைவுபடுத்தப்படும் எனவும் பதிவாளர் நாயகம் விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.